என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குற்றாலம் அருகே வாயில் துணியை கட்டி முதியவர் அடித்துக்கொலை
Byமாலை மலர்4 May 2022 5:39 AM GMT (Updated: 4 May 2022 5:39 AM GMT)
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே வாயில் துணியை கட்டி முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றாலம்:
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள கீழ இலஞ்சியை சேர்ந்தவர் கோட்டைமாடன்(வயது 65). இவர் மாந்தோப்பு வைத்து பராமரித்து வந்தார்.
இன்று அதிகாலை வழக்கம்போல் தோப்புக்கு சென்ற கோட்டைமாடன் அங்கு இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக தோட்டத்திற்கு சென்றவர்கள் பார்த்து குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் அந்த தோப்புக்கு விரைந்து சென்றனர். அங்கு கோட்டைமாடன் வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்களும் இருந்தன. இதனால் அவரை மர்மநபர்கள் அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
மேலும் அவர் சத்தம்போடாமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து கட்டியிருக்கலாம் என்றும் சந்தேகப்பட்டனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முதியவரை அடித்துக்கொன்ற கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள கீழ இலஞ்சியை சேர்ந்தவர் கோட்டைமாடன்(வயது 65). இவர் மாந்தோப்பு வைத்து பராமரித்து வந்தார்.
இன்று அதிகாலை வழக்கம்போல் தோப்புக்கு சென்ற கோட்டைமாடன் அங்கு இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக தோட்டத்திற்கு சென்றவர்கள் பார்த்து குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் அந்த தோப்புக்கு விரைந்து சென்றனர். அங்கு கோட்டைமாடன் வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்களும் இருந்தன. இதனால் அவரை மர்மநபர்கள் அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
மேலும் அவர் சத்தம்போடாமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து கட்டியிருக்கலாம் என்றும் சந்தேகப்பட்டனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முதியவரை அடித்துக்கொன்ற கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X