என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாயம்
விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண்கள்-வாலிபர் மாயம்
விருதுநகர் மாவட்டத்தில் இளம்பெண்கள்-வாலிபர் மாயமானார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி, திருமணமான இளம்பெண்கள் மாயமாகி வருவது தொடர்கதையாக உள்ளது. இது தொடர்பாக நாள்தோறும் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் 2 இளம்பெண்கள், ஒரு வாலிபர் மாயமாகியுள்ளனர். அதன் விவரம் வருமாறு.
விருதுநகர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது50). இவரது மகள் ஆர்த்தீஸ்வரி. பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் கடந்த சிலமாதங்களாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு படித்து வந்தார்.
நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு ஆர்த்தீஸ்வரி சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் பலன் இல்லை. இது குறித்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள காக்கிவாடான்பட்டியை் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் தட்டச்சராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற இளம்பெண் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காக்கிவாடன்பட்டி சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகன் அருண்குமார் (22). சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று அருண்குமார் பின்னர் வீடு திரும்பாமல் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






