search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம சபை கூட்டம்
    X
    கிராம சபை கூட்டம்

    பண்ருட்டி ஒன்றியத்தில் 42 கிராமங்களில் கிராம சபை கூட்டம்

    பண்ருட்டி ஒன்றியம் சொரத்தூர் ஊராட்சி மே தின கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ஜனார்த்தனன் தலைமையில் நடைப்பெற்றது.

    பண்ருட்டி:

    பண்ருட்டி ஒன்றியத்தில் 42 கிராமங்களில் மே தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. வீரப்பெருமா நல்லூர் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை தலைவர், ஊராட்சி செயலாளர், கிராம பொதுமக்கள் கொண்டனர். கூட்டத்தில் பாதுகாப்பான குடிநீர், வீடு, சமூக பாதுகாப்பு ஆகியவைகளை வலியுறுத்தி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பண்ருட்டி ஒன்றியம் சொரத்தூர் ஊராட்சி மே தின கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ஜனார்த்தனன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் தமிழ்ச்செல்வி ஆறுமுகம் தங்கதுரை,வேளாண் துரை, ஜெயதீசன் ஆசிரியர் மற்றும் வார்டு உறுப்பினர் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×