என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
என்.சி.சி. மாணவர்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம்
Byமாலை மலர்30 April 2022 10:18 AM GMT (Updated: 30 April 2022 10:18 AM GMT)
சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் என்.சி.சி. மாணவர்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம் தொடக்க விழா நடந்தது.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) வருடாந்திர பயிற்சி முகாம் 10 நாட்கள் நடக்கிறது.
இதில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி, கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி, ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ். மேல்நிலைப்பள்ளி, கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி, வி.வி.டி. மேல்நிலைப்பள்ளி, மணப்பாடு செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி, விளாத்திக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, நாகலாபுரம் எஸ்.ஏ.என். மேல்நிலைப்பள்ளி, ஆறுமுகநேரி கே.ஏ. மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவ, மாணவிகள் பயிற்சி முகாமில் கலந்து கொள்கின்றனர்.
இவர்களுக்கு தூத்துக்குடி என்.சி.சி. கமாண்டிங் ஆபிசர் சுனில் உத்தம் பயிற்சி அளிக்கிறார். இந்த பயிற்சி முகாமின் தொடக்க விழா நடந்தது. பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஸ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி ஆகியோர் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர்.
இதில் அடிப்படை உடற்பயிற்சி, ஆயுதங்கள் கையாளும் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், மேப் ரீடிங், டிரில் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
மேலும் தேசிய ஒருமைப்பாடு, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு பி.எஸ்.ஆர். கல்லூரி நிர்வாகம் சார்பில் தங்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. பயிற்சியின் முடிவில் முகாமில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்க ளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை பி.எஸ்.ஆர். கல்லூரி நிர்வாகம், தேசிய மாணவர் படையின் இணை அதிகாரி மாதவன் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X