என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடனை திருப்பி கேட்டதால் பெண்ணுக்கு கொலை மிரட்டல்- தந்தை மகன்கள் மீது போலீஸார் வழக்கு
Byமாலை மலர்28 April 2022 10:31 AM GMT (Updated: 28 April 2022 10:31 AM GMT)
சங்கராபுரம் அருகே கடனை திருப்பி கேட்டதால் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் லைன் தெருவைச் சேர்ந்தவர் சிகாமணி. இவர், கள்ளக்குறிச்சி அடுத்த குரூரைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் தனது மகள் திருமணத்திற்கு 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் முருகேசன் இறந்ததால், அவரது மகள் இந்திரா, தனது தந்தை கொடுத்த பணத்தை தரும்படி சிகாமணியிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். கடந்த 25மந் தேதி சங்கராபுரம் வந்து சிகாமணியிடம் பணத்தை கேட்ட இந்திராவை சிகாமணி, அவரது மகன்கள் பாலமுருகன், தாமோதரன் ஆகியோர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து இந்திரா அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார், சிகாமணி (60), பாலமுருகன் (35), தாமோதரன் (32) ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X