என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மனைவியை தாக்கிய கணவர் கைது

    நம்பியூர் அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    நம்பியூர்:

    நம்பியூர் அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    நம்பியூர் அருகே உள்ள கோடுப்புள்ளம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (34). கோபியில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி  சந்தியா (28) என்ற மனைவி உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 24-ந் தேதி சந்தியா தனது சித்தி வீட்டில் நடந்த விசேஷத்திற்கு சென்று வந்துள்ளார். அப்பொழுது ரமேஷ்குமார் சந்தியாவிடம் வீட்டிற்கு வர இவ்வளவு நேரமா என கேட்டுக்கொண்டு  தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளார்.

    இதில் சந்தியாவுக்கு இடது பக்க நெற்றியில் காயம் ஏற்பட்டது. இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் உன்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

    இதனையடுத்து சந்தியா தனது தாயாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் சந்தியாவின் சித்தி மகன் கார்த்திக் என்பவர் வீட்டிற்கு வந்து கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சந்தியாவை சிகிச்சைக்காக அனுமதித்தார்.
    இது குறித்து சந்தியா நம்பியூர் போலீஸ் நிலையத் தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்த ரமேஷ் குமாரை கைது செய்தனர்.  
    பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×