என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடவடிக்கை
    X
    நடவடிக்கை

    நகராட்சி பொறியாளர் உதவியாளர் விடுவிப்பு

    பொதுமக்களின் புகார் மீது அலட்சியம் காட்டி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சி பொறியாளர் மணி. இவர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்காமல் தாமதப் படுத்துவதாக புகார்கள் எழுந்தன. இதேபோல் உதவியாளர் பரந்தாமன், பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பான புகார்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிவருவதாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து விருதுநகர் நகராட்சி கமிஷனர் செய்யது முஸ்தபா விசாரணை நடத்தி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் நகராட்சி இயக்குநருக்கு பரிந்துரை செய்தார். 

    இதையடுத்து மண்டல இயக்குநர் விஜயலட்சுமி இருவர் மீதான புகார்தொடர்பாக விசாரித்து நகராட்சி பொறியாளர் மணி, உதவியாளர் பரந்தாமன் ஆகியோரை அந்த பொறுப்பில் இருந்து விடுவித்து காத்திருப்பு பட்டியலில்வைக்க உத்தரவிட்டார்.
    Next Story
    ×