என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேலூர் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு- 496 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல்
Byமாலை மலர்24 April 2022 12:27 PM GMT (Updated: 24 April 2022 12:27 PM GMT)
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறார் குற்றவாளி தவிர மற்ற 4 பேர் குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி இரவு, பெண் மருத்துவர் ஒருவர், தனது நண்பருடன் சென்றபோது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், பெண் மருத்துவரை மறைவான இடத்திற்கு கொண்டு சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு இளம் சிறார் உள்பட 5 குற்றவாளிகளில் பார்த்திபன், மணிகண்டன், சந்தோஷ்குமார், பரத் ஆகிய 4 பேர் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரித்தனர்.
இந்த நிலையில் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பான தடயங்கள் மற்றும் விசாரணை குறிப்புகள் அடங்கிய 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை வேலூர் மாவட்ட காவல் துறை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மேலும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர மாவட்ட காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X