என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய லேப் டெக்னீசியன் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்பு
ஈரோடு:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). இவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் ஆக பணி புரிந்து வந்தார்.
கடந்த 17-ந் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் பவானிசாகர் வந்த ராஜேந்திரன் தொப்பம் பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பாலம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி குளித்தார்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ராஜேந்திரன் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி மாயமானார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பாவனிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ராஜேந்திரனை தேடி வந்தனர்.
இவ்வாறாக ஒருநாள், இரண்டுநாள் இல்லை தொடர்ந்து 7 நாட்களாக ராஜேந்திரனை தேடினர். இந்நிலையில் நேற்று 8-வது நாளாக கீழ்பவானி வாய்க்காலில் ராஜேந்திரனை தேடும் பணி நடந்தது.
தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நம்பியூர் மூணாம் பள்ளி என்ற இடத்தில் கீழ் பவானி வாய்க்காலில் ராஜேந்திரன் உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது தெரியவந்தது.
இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் ராஜேந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து ராஜேந்திரன் உடல் அவரது உறவினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்