என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் பலி
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் கிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் குணசேகர் (29). தனியார் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளி. இவர் கடந்த 19ம் தேதி அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் மகன் முகேஷ் (7) என்பவரை அழைத்துக்கொண்டு திருவள்ளூர் சென்றார்.
பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி வந்து கொண்டு இருந்தனர். தண்டலம் அருகே வரும்போது திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறிய 2 பேரும் கீழே விழுந்தனர்.
இதில் குணசேகருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறுவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்த பொதுமக்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக குணசேகரை சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்