என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு பஸ்நிலையத்தில் முககவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள்.
    X
    ஈரோடு பஸ்நிலையத்தில் முககவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள்.

    பொது இடங்களில் முககவசம் அணிவதை மறந்த பொதுமக்கள்

    ஈரோடு மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து கவனமுடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து கவனமுடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலில் கடந்த 2020 -ம் ஆண்டு மார்ச் 22-ந் தேதி தாய்லாந்து நாட்டில் இருந்து வந்திருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில் இருந்து ஈரோடு மாவட்டத்தில், தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வந்தது.

    இதனைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 2&ம் அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு அதிக பட்சமாக 1,764 வரை பதிவாகியது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் சிலர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
    இதன்பின் மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக் கைகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக 2&ம் அலை கட்டுக்குள் வரத் தொடங்கியது.

    இந்த கால கட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கண்டிப் பாக முககவசம் அணிந்து செல்ல வேண்டும். பொது இடங்களில் சமூக இடை வெளி பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். 
    ஆனால் பெரும்பா லானோர் முககவசம் அணியாமல் சென்றதால் சுகாதாரத் துறையினர், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் ஒன்றிணைந்து முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    முக கவசம் அணிந்தால் கொரோனா  ஒருவரிட மிருந்து மற்றொரு வருக்கு பரவாது என அரசும் வலியுறுத்தியது. இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக மாவட்டத்தில் 3-ம் அலை உருவாக்கி ஏராளமானோர் பாதிக்கப்-பட்டனர்.
    தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரண மாக ஈரோடு மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் வர தொடங் கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க் கைக்கு திரும்ப தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் தொடங்கி-யுள்ளது. இந்தியா வில் கேரளா டெல்லி போன்ற மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று கூட சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்கும் 12 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 

    இதையடுத்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். மேலும் பொது இடங்களில் செல்லும் மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார். 


    ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா தாக்கம் கட்டுக்குள் இருந்தாலும் பொதுமக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத் தியுள்ளனர். தற்போது 90 சதவீத பொதுமக்கள் முக கவசம் அணியும் பழக்கத்தை மறந்து விட்டனர். ஒரு சிலர் மட்டுமே முககவசம் அணிந்து செல்கின்றனர். 

    குறிப்பாக பொது இடங்களில் முககவசம் அணியாமல் சர்வ சாதாரணமாக உலா வருகின்றனர். பெண்கள் தங்களது குழந்தைகளை வெளியே அழைத்து வரும்போது முககவசம் அணிந்து வருவதில்லை. கொரோனா முழுவதுமாக விலகி விடவில்லை என்பதை மக்கள் உணரவேண்டும்.

    தற்போது கோவில் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இதில் பெரும் பாலானோர் முககவசம் அணிந்து வருவதில்லை. இதேபோல் திருமணம் உட்பட விசேஷங் களிலும் முககவசம் அணிவ தில்லை. பொதுமக்கள் மத்தியில் தற்போது விழிப்புணர்வு குறைந்து விட்டது. கொரோனா பரவல் தடுப் பதில் முககவசம் முக்கிய பங்கு வகிக்கிறது. 
    எனவே பொது இடங்களில் முககவசம் அணியாமல் வரும் மக்களுக்கு மீண்டும் அபராதம் விதிக்கும் பணிய தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி, ஆசனூர் போலீஸ் நிலையம் மற்றும் தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியை போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் போலீசாரிடம் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது சத்தியமங்கலம் டி.எஸ்.பி.ஜெயபாலன், தாளவாடி இன்ஸ்பெக்டர் அன்பரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×