என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காதலனோடு ஓட்டம் பிடிக்க தயாரான மகளை உருட்டுக்கட்டையால் தாக்கிய தாய்
Byமாலை மலர்22 April 2022 7:30 AM GMT (Updated: 22 April 2022 7:30 AM GMT)
காதல் விவகாரத்தில் மகளை தாயே கட்டையால் அடித்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மாணவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம்பிள்ளை- ஜெயலட்சுமி தம்பதியின் மகள் சத்தியா (வயது 27). இவர் பி.எஸ்சி. நர்சிங் படிப்பை முடித்து விட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார்.
அப்போது பெயர் விலாசம் தெரியாத நபர் ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்தார். மேலும் வெளியில் ஊர் சுற்றியதோடு, அவருடன் நெருங்கி பழகுவதை தெரிந்த நபர்கள் மூலம் சத்தியாவின் தாய் ஜெயலட்மி அறிந்தார்.
உடனே மகளை அழைத்து கண்டித்த தாய் ஜெயலட்சுமி, வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி வீட்டிலேயே இருந்த சத்தியா, தாய்க்கு தெரியாமல் தனது காதலனோடு தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் காதலனோடு சேர்ந்து வாழ நினைத்த சத்தியா நேற்று சென்னைக்கு கிளம்புவதாகக் கூறி பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு தயாராகியுள்ளார்.
இதனால் தாய் ஜெயலட்சுமிக்கும், மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தாய், நீ உயிரோடு இருந்தால்தானே அவனோடு ஓடுவாய் என்று கூறி, உருட்டுக்கட்டையால் மகளை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சத்தியா அங்கேயே மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து நாகுடி வட்ட கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் கொடுத்த புகாரின் பேரில் நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகளை தாக்கிய தாயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X