என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வீட்டில் பதுக்கி வைத்த 25 டன் ரேசன் அரிசி பறிமுதல்- 5 பேர் கைது
Byமாலை மலர்22 April 2022 6:33 AM GMT (Updated: 22 April 2022 6:33 AM GMT)
கூடுவாஞ்சேரியில் வீட்டில் பதுக்கி வைத்த 25 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
வண்டலூர்:
கூடுவாஞ்சேரி அடுத்த மகாலட்சுமி நகர், முதல் குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வட்ட வழங்கல் அதிகாரி சசிகலாவிற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் குறிப்பிட்ட வீட்டில் சோதனை செய்தனர்.அங்கு மூட்டை மூட்டையாக ரேசன் அரசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து வீட்டில் இருந்த கூடுவாஞ்சேரியை சேர்ந்த சுரேஷ், சாகுல் அமீது, ஜாகீர் உசேன், மணிகண்டன், பிரபாகரன் ஆகிய 5 பேரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்து சுமார் 25 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அவர்கள் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து கூடுதல் விலைக்கு கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவ்வளவு ரேசன் அரிசி கிடைத்தது எப்படி? ரேசன் கடை ஊழியர்கள் இதற்கு உடந்தையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசிமூட்டைகள் காஞ்சிபுரத்தில் உள்ள குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கூடுவாஞ்சேரி அடுத்த மகாலட்சுமி நகர், முதல் குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வட்ட வழங்கல் அதிகாரி சசிகலாவிற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் குறிப்பிட்ட வீட்டில் சோதனை செய்தனர்.அங்கு மூட்டை மூட்டையாக ரேசன் அரசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதையடுத்து வீட்டில் இருந்த கூடுவாஞ்சேரியை சேர்ந்த சுரேஷ், சாகுல் அமீது, ஜாகீர் உசேன், மணிகண்டன், பிரபாகரன் ஆகிய 5 பேரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்து சுமார் 25 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அவர்கள் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து கூடுதல் விலைக்கு கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவ்வளவு ரேசன் அரிசி கிடைத்தது எப்படி? ரேசன் கடை ஊழியர்கள் இதற்கு உடந்தையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசிமூட்டைகள் காஞ்சிபுரத்தில் உள்ள குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X