என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் கொலை.
தலை துண்டித்து வாலிபர் கொலை
நரிக்குடி அருகே தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
காரியாபட்டி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா வீரசோழன் அருகே உள்ள பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 27). இவர் அங்குள்ள மயானத்தில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறை யில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
இந்த கொலை தொடர் பாக கொலையாளிகளை பிடிக்க திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன், நரிக்குடி இன்ஸ் பெக்டர் ராம நாராயணன், சப்-&இன்ஸ்பெக்டர்கள் தமிழழகன், துரைசிங்கம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது. தனிப்படை போலீசார் ஆனந்தராஜ் கொலை குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மதுபோதையில் இருந்தபோது ஏற்பட்ட தகராறில் ஆனந்தராஜ் கொலை செய்யப்பட்ட தாக தெரிகிறது. இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் தரக்குடியை சேர்ந்த முத்துஇருளாண்டி (19) வசந்த பாண்டி (21), சிலம்பரசன் (42) சசிகுமார் (26) ஆகிய 4பேரை போலீசார் பிடித்துள்ளனர். அவரிடம் கொலை தொடர் பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






