என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெங்காயம் விலை தொடர் சரிவால் விவசாயிகள் கவலை
Byமாலை மலர்20 April 2022 11:16 AM GMT (Updated: 20 April 2022 11:16 AM GMT)
திண்டுக்கல் மார்க்கெட்டில் வெங்காயம் விலை தொடர் சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
திண்டுக்கல்:
தாடிக்கொம்பு சாலையில் உள்ள வெங்காய மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகளால் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. இது தவிர பல்லாரி மற்றும் முதல் தர வெங்காயம் வெளிமாநிலங்களில் இருந்து வருகிறது.
இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 1 மாதத்துக்கும் மேலாகவே வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.உள்ளூர் வரத்து அதிகரிப்பின் காரணமாகவும், வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாததாலும் இந்த விலை நிலவுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று குஜிலியம்பாறை, எரியோடு, வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டும் 3000 மூடை வெங்காயம் வந்து இறங்கியுள்ளது. 1 கிலோ ரூ.10க்கும், முதல் தரம் நயம் வெங்காயம் ரூ.20க்கும் விற்பனையாகிறது.
இதே போல் பல்லாரி கிலோ ரூ.15க்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து இந்த விலை சரிவால் உள்ளூர் விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், பொதுவாக மழை காலங்களில் வெங்காயத்துக்கு அழுகல்நோய் ஏற்பட்டு போதிய விலை கிடைக்காத நிலை ஏற்படும். ஆனால் கோடை காலத்திலும் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கிலோ ரூ.60க்கு விற்கப்பட்ட வெங்காயம் தற்போது 4ல் ஒரு பகுதியாக விலை குறைந்துள்ளது.
இது வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பேரிடியாக உள்ளது. எனவே அரசு போதிய நிவாரணம் அல்லது ஏற்றுமதிக்கான வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தாடிக்கொம்பு சாலையில் உள்ள வெங்காய மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகளால் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. இது தவிர பல்லாரி மற்றும் முதல் தர வெங்காயம் வெளிமாநிலங்களில் இருந்து வருகிறது.
இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 1 மாதத்துக்கும் மேலாகவே வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.உள்ளூர் வரத்து அதிகரிப்பின் காரணமாகவும், வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாததாலும் இந்த விலை நிலவுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று குஜிலியம்பாறை, எரியோடு, வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டும் 3000 மூடை வெங்காயம் வந்து இறங்கியுள்ளது. 1 கிலோ ரூ.10க்கும், முதல் தரம் நயம் வெங்காயம் ரூ.20க்கும் விற்பனையாகிறது.
இதே போல் பல்லாரி கிலோ ரூ.15க்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து இந்த விலை சரிவால் உள்ளூர் விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், பொதுவாக மழை காலங்களில் வெங்காயத்துக்கு அழுகல்நோய் ஏற்பட்டு போதிய விலை கிடைக்காத நிலை ஏற்படும். ஆனால் கோடை காலத்திலும் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கிலோ ரூ.60க்கு விற்கப்பட்ட வெங்காயம் தற்போது 4ல் ஒரு பகுதியாக விலை குறைந்துள்ளது.
இது வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பேரிடியாக உள்ளது. எனவே அரசு போதிய நிவாரணம் அல்லது ஏற்றுமதிக்கான வாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X