search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணல்
    X
    மணல்

    விருத்தாசலம் அருகே நாளுக்கு நாள் அதிகரிக்கும் மணல் கடத்தல்

    விருத்தாசலம் அருகே மணல் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் உள்ளது வெள்ளாறு. இந்த வெள்ளாற்றில் இன்று காலை 4 பேர் இரண்டு மாட்டு வண்டியுடன் அனுமதியின்றி மணல் கடத்துவதாக கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது.

    இந்த தகவலை அடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுபோது போலீசார் வருவதை கண்ட நான்கு பேரும் 2 மாட்டு வண்டியையும் 2 மோட்டார் சைக்கிளையும் அப்படியே விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்.

    உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து 2 மாட்டு வண்டி 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து தப்பியோடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இதே போன்று மணல் கடத்தல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    Next Story
    ×