search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர பவள விழா கூட்டம் நடைபெற்றது.
    X
    சுதந்திர பவள விழா கூட்டம் நடைபெற்றது.

    சுதந்திரபவள விழா கூட்டம்

    சீர்காழியில் சுதந்திரபவள விழா ஆண்டையொட்டி சிறப்பு அரங்க கூட்டம் நடந்தது.
    சீர்காழி:

    சீர்காழியில் சுதந்திரபவள விழா ஆண்டையொட்டி சுவாமி விவேகானந்தர் தேசியப் பேரவையின் சார்பில் சும்மாவா வந்தது சுதந்திரம் என்ற தலைப்பில் சிறப்பு அரங்க கூட்டம் நடந்தது. 

    சுதந்திர போராட்ட வீரர், புரட்சியாளர் நீலகண்ட பிரம்மச்சாரியின் பேரன் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கடவாசல் ரமணன், விஸ்வ ஹிந்து

    பரிஷத் தமிழ்நாடு மண்டல பொறுப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சுவாமி விவேகானந்தர் தேசியப் பேரவையின் தலைவரும், இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளருமான கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தொடக்க உரையாற்றினார். 

    பாரதிய பண்பாட்டு பேரவையின் தலைவர் எம்.ஜி.பி.எஸ்.மணியன் , சுதந்திர போராட்ட வரலாறு குறித்தும், வீரர்களின் தியாகம் மற்றும் தற்போதைய பாரதத்தின் நிலை குறித்தும் விளக்கி

     சிறப்புரையாற்றினார்.  கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி, தமிழ்நாடு பிராமணர் சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத், பாரதிய ஜனதா கட்சி, இந்து புரட்சி முன்னணி, பூசாரிகள் பேரவை நிர்வாகிகளும்

    கல்வியாளர்கள்,  ஆசிரியர்கள், வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×