என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாணிப்பாறை வனத்துறை கதவு முன்பு குவிந்திருந்த பக்தர்கள்.
பக்தர்கள் ஏமாற்றம்
விருதுநகர் அருகே சதுரகிரி மலைக்கோவிக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலும் தொடர்ச்சியாக சில தினங்களாக பெய்த தொடர்மழையின் காரணமாக பக்தர்கள் மலையேறி சென்று சாமிதரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சித்ராபவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர்கள் தாணிப்பாறையில் வனத்துறை நுழைவுவாயில் முன்பு குவிந்தனர்.
அவர்களுக்கு மலையேறிச்சென்று சாமிதரிசனம் செய்ய அனுமதி இல்லாததால் பக்தர்களிடம் வத்திராயிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தாணிப்பாறை வனத்துறை நுழைவுவாயில் முன்பு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
Next Story






