என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உயர்மின் அழுத்த மின்சாரத்தால் 45 வீடுகளில் மின்சாதனம் பாதிப்பு
Byமாலை மலர்16 April 2022 9:54 AM GMT (Updated: 16 April 2022 9:54 AM GMT)
கூடங்குளம் அருகே உயர்மின் அழுத்த மின்சாரத்தால் 45 வீடுகளில் டி.வி. உள்ளிட்ட மின்சாதனம் பாதிக்கப்பட்டது.
வள்ளியூர்:
செட்டிகுளம் புதுமனை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின்சாரவசதிக்காக அமைக்கப்பட்ட மின் வயர்கள் மின் கம்பங்களுக்கு இடையே மிகவும் தாழ்வாக இருந்து வருகிறது.
அவ்வப்போதுகாற்று மற்றும் மழை காலங்களில் வயர்கள்ஒன்றோடு ஒன்று உரசி விபத்துகள் ஏற்படுத்தி கொண்டு இருந்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து இப்பகுதியில் காற்றுடன் கூடிய கோடை மழை பெய்து வருகிறது.
இதனால் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளமின்சார வயர்கள் உரசி கொண்டதால் உயர் மின்னழுத்தம் காரணமாக பல குடியிருப்பு வீடுகளில் திடீர் மின்தடைஉருவானது.
அத்துடன் பயன்பாட்டில் இருந்த சுமார் 45 வீடுகளில் பல்பு, டிவி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாதன பொருட்கள் சேதமடைந்து குடியிருப்புவாசிகளை பாதிப்புக்கு உள்ளாக்கியது.
மீண்டும் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக துறை ரீதியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என செட்டிகுளம் புதுமனை பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செட்டிகுளம் புதுமனை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின்சாரவசதிக்காக அமைக்கப்பட்ட மின் வயர்கள் மின் கம்பங்களுக்கு இடையே மிகவும் தாழ்வாக இருந்து வருகிறது.
அவ்வப்போதுகாற்று மற்றும் மழை காலங்களில் வயர்கள்ஒன்றோடு ஒன்று உரசி விபத்துகள் ஏற்படுத்தி கொண்டு இருந்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து இப்பகுதியில் காற்றுடன் கூடிய கோடை மழை பெய்து வருகிறது.
இதனால் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளமின்சார வயர்கள் உரசி கொண்டதால் உயர் மின்னழுத்தம் காரணமாக பல குடியிருப்பு வீடுகளில் திடீர் மின்தடைஉருவானது.
அத்துடன் பயன்பாட்டில் இருந்த சுமார் 45 வீடுகளில் பல்பு, டிவி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாதன பொருட்கள் சேதமடைந்து குடியிருப்புவாசிகளை பாதிப்புக்கு உள்ளாக்கியது.
மீண்டும் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக துறை ரீதியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என செட்டிகுளம் புதுமனை பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X