search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பின்னணி பாடகர் வேல்முருகன் சாமி தரிசனம் செய்தார்.
    X
    பின்னணி பாடகர் வேல்முருகன் சாமி தரிசனம் செய்தார்.

    வைத்தீஸ்வரன்கோவிலில் பின்னணி பாடகர் சாமி தரிசனம்

    வைத்தீஸ்வரன்கோவிலில் பின்னணி பாடகர் வேல்முருகன் சாமி தரிசனம் செய்தார்.


    சீர்காழி:

    திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் சுவாமி கோவிலுக்கு தனது மனைவி மற்றும் மகள்களுடன் வந்தார்.
     
    கோவிலில் உள்ள சித்தாமிர்த தீர்த்த குளத்தில் புனித நீரை தெளித்துக் கொண்டு கற்பகவிநாயகர், வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வமுத்துக்குமாரசாமி, அங்காரகன் ஆகிய

    சுவாமி சன்னதிகளில் அர்ச்சனைகள் செய்து வழிபாடு மேற்கொண்டார். அப்போது வேல்முருகன் பக்தி பாடல்களை பாடிய-வாறு சுவாமி தரிசனம் செய்தார் சமீபத்தில் பின்னணி பாடகர் வேல்முருகன்

     5-ம் வகுப்பு படிக்கும் மகள் ரக்ஷா கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். ஒரு நிமிடத்தில் ஐம்பத்தொரு பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு அவை எந்த பல்கலைக்கழகம் என கூறி

    இந்த சாதனையை புரிந்தார். இந்த சாதனை புரிந்த ரக்ஷாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே சாதனை புரிந்த தன் மகளுக்காக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வந்த வேல்முருகன் நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் வழிபாடு மேற்கொண்டார். பின்னர் கோவிலில் வெளியில்

    தனது குடும்பத்தினருடன் சிலம்பம் கற்று வரும் மாணவர்கள் சந்தித்து சிலம்ப கலையை ஊக்குவிக்-கும் வகையில் அவர்களுடன் இணைந்து சிலம்பம் சுற்றினார்.

    Next Story
    ×