என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம் உடையாப்பட்டியில் லாரி டிரைவர் திடீர் சாவு
Byமாலை மலர்16 April 2022 6:12 AM GMT (Updated: 16 April 2022 6:12 AM GMT)
சேலம் அருகே லாரி டிரைவர் திடீரென வலிப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்தார்.
சேலம்:
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த தெற்கு காலிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கனகரெத்தினம் (வயது 55). டிரைவரான இவர் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு லாரி ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை சேலம் உடையாப்பட்டி பகுதியில் வந்தபோது சோர்வாக இருப்பதாக கிளீனரிடம் கூறி விட்டு லாரியை சாலையோரம் நிறுத்தி ஓய்வெடுத்தார்.
பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்தார். இதனை பார்த்த கிளீனர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சேலத்திற்கு விரைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த தெற்கு காலிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கனகரெத்தினம் (வயது 55). டிரைவரான இவர் சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு லாரி ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை சேலம் உடையாப்பட்டி பகுதியில் வந்தபோது சோர்வாக இருப்பதாக கிளீனரிடம் கூறி விட்டு லாரியை சாலையோரம் நிறுத்தி ஓய்வெடுத்தார்.
பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்தார். இதனை பார்த்த கிளீனர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சேலத்திற்கு விரைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X