
கடலூர் பாதிரிக்குப்பம் சேர்ந்தவர் கபிலன் (வயது 37). அவரது மனைவி மங்காத்தா (28) இவர்களது மகன் சர்வேஷ் (4). இவர்கள் 3 பேரும் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் காராமணிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் திடீரென்று மோதியதில் கணவன் கபிலன், மனைவி மங்காத்தா மற்றும் சிறுவன் சர்வேஷ் ஆகிய 3 பேரும் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.