என் மலர்
உள்ளூர் செய்திகள்

தண்ணீர் திறப்பு
பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிளவக்கல் பெரியாறு அணை அமைந்துள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு இந்த அணையில் 28 அடியாக நீர்மட்டம் சில நாட்களாக பெய்த தொடர் ம¬யினால் 32 அடியை எட்டியது. இந்த நிலையில் பாசனத்துக்காக பிளவக்கல் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் கோரிக் கையை ஏற்று நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. 3 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. உதவி- கலெக்டர் பிரித்திவிராஜ் அணை மதகை திறந்து வைத்தார். இதன் மூலம் வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள 802 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலெக் டரின் நேர்முக உதவியாளர் தனமுனி, மாவட்ட வேளாண் இயக்குனர் சங்கரநாராயணன், செயற்பொறியாளர் மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர்கள் மலர்விழி, கிரண்பேடி, வத்திராயிருப்பு தாசில்தார் சின்னதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






