search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டா திருத்த முகாம்.
    X
    பட்டா திருத்த முகாம்.

    கணினி பட்டா திருத்த முகாம்

    சிவகங்கையில் கணினி பட்டா திருத்த முகாம் நடந்தது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற உள்ளது. 

    அதன் தொடர்ச்சியாக, நாளை (13ந்தேதி) தேவகோட்டை வட்டத்தில் திரானி, விரிசூர் மற்றும் உருவாட்டி கிராமங்களிலும், திருப்பத்தூர் வட்டத்தில் நெடுமறம், பட்டாக்குறிச்சி கிராமங்களிலும், சிவகங்கை வட்டத்தில் பில்லூர் மற்றும் அரசனூர் கிராமங்களிலும், இளையான்குடி வட்டத்தில் காரைக்குளம், மேலத் துறையூர் கிராமங்களிலும், காளையார்கோவில் வட்டத்தில் ஒய்யவந்தான் கிராமத்திலும் கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. 

    பொதுமக்கள் மேற்கண்ட வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்புமுகாமில் கலந்து கொண்டு கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×