search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் பூசாரிகள் வலியுறுத்தல்

    கோவில்களில் திட்டத்தை செயல்படுத்த சமையலர்கள் உள்ளிட்ட இரு பணியாளருக்கு மாத ஊதியம், கியாஸ் சிலிண்டர், காய்கறிகள், அரிசி என 30 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது.
    உடுமலை:

    இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்கள் பலவற்றில் முழுநேர மற்றும் பகுதி நேர அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

    பட்டியலில் உள்ள கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தி வருவதற்கு மாற்றாக அந்தந்த மாவட்டத்தில் அதிக வருவாய் தரக்கூடிய கோவில்களை கண்டறிந்து, அவற்றில் முழு நேர அன்னதான திட்டத்தை செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும் என திருப்பூர் மாவட்ட கோவில் பூசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    இதுகுறித்து கோவில் பூசாரிகள் நல சங்க மாநில தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் பலவற்றில் முழுநேர மற்றும் பகுதி நேர அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர பட்டியலுக்கு உட்பட்டு வருவாய் குறைந்த கோவில்களில், 25 முதல் 50 பேருக்கு மட்டும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள், இதர பணியாளர்கள் உள்ளிட்டவர்களும் இதில் அடங்குவர்.

    எனில் இத்திட்டத்தால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் கிடைப்பது சந்தேகமே. கோவில்களில் திட்டத்தை செயல்படுத்த சமையலர்கள் உள்ளிட்ட இரு பணியாளருக்கு மாத ஊதியம், கியாஸ் சிலிண்டர், காய்கறிகள், அரிசி என  30 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. 

    இவ்வாறு திட்டத்துக்காக செலவிட்டும் பக்தர்களுக்கு அன்னதானம் கிடைக்காமல் போவதால் பயனில்லை. கோவில்களின் நிதி ஆதாரங்களை கணக்கிடாமல் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    பட்டியலில் உள்ள கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தி வருவதற்கு மாற்றாக அந்தந்த மாவட்டத்தில் அதிக வருவாய் தரக்கூடிய கோவில்களை கண்டறிந்து அவற்றில் முழு நேர அன்னதான திட்டத்தை செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும்.

    இதனால் வருவாய் தரும் கோவில்களுக்கு வரும் எண்ணற்ற பக்தர்கள் பயன்பெறுவர் என்று தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×