என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புவனகிரி பேரூராட்சியில் ரூ. 1 கோடி பணம் மோசடி செய்த ஊழியர்
புவனகிரி:
புவனகிரி அருகே கீழமணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 29). இவர் புவனகிரி பேரூராட்சியில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல் சாதிக் பாஷா பணியில் இருந்த போது தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வீரமணி செயல் அலுவலர் கையெழுத்தை இவரே போட்டு ரூ. 90 லட்சத்து 93 ஆயிரத்து 400 காசோலைகள்மூலம் பணமோசடி செய்துள்ளார்.
தற்போது புவனகிரி பேரூராட்சியில் கணக்கு தணிக்கை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கணக்கு தணிக்கையில் வீரமணி மோசடி செய்துள்ளார் என்பதும் அதன் பின்னர் அவர் பணிக்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது.
உடனே தற்போது பணியில் உள்ள புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் புவனகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.
மேலும் போலீசார் இந்த பண மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்று வேறு ஏதாவது பண மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்