search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக்கல்லூரி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை படத்தில் காணலாம்
    X
    நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக்கல்லூரி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை படத்தில் காணலாம்

    குமரியை குளிர வைத்த கோடை மழை- நாகர்கோவில் 36 மி.மீ. பதிவு

    கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கோடை மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுவதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று காலையில் வெயில் அடித்து வந்த நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோ‌ஷண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. நாகர்கோவிலில் மாலை 4 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரமாக இடைவிடாது கொட்டித் தீர்த்தது. இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மகளிர் கிறிஸ்தவக்கல்லூரி சாலை, மீனாட்சிபுரம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். நாகர்கோவில் அதிகபட்சமாக 36 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இரணியல், ஆனைக்கிடங்கு, குளச்சல், குருந்தன்கோடு, முள்ளாங்கினாவிளை, மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டி தீர்த்தது வரும் மழையின் காரணமாக அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குவிந்தனர். அருவியில் ஆனந்தக் குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு மற்றும் மலையோர பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 37.76 அடியாக இருந்தது. அணைக்கு 271 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 21.30 அடியாக உள்ளது. அணைக்கு 71 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 8.20 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 8.30 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 19.60 அடியாகவும் உள்ளது.

    கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கோடை மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுவதால் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-16.2, பெருஞ்சாணி-22.4, சிற்றாறு-1-25.6, சிற்றாறு-2- 34.2, மாம்பழத்துறையாறு- 10.2, நிலப்பாறை-4, இரணியல்-27, ஆனைக்கிடங்கு-10.2, குளச்சல்-12, குருந்தன்கோடு- 28, அடையாமடை-4 கோழிப்போர்விளை-5, புத்தன் அணை-21.8, முள்ளங்கினா விளை-10.6, திற்பரப்பு-9.2, நாகர்கோவில்-36 பூதப்பாண்டி-12.4, சுருளோடு-24, ஆரல்வாய்மொழி-3, பாலமோர்-11.2, மயிலாடி-12.2. 
    Next Story
    ×