search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீசன் தொடங்கியுள்ள நிலையில் கொட்டை முந்திரியின்  விளைச்சல் மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.
    X
    சீசன் தொடங்கியுள்ள நிலையில் கொட்டை முந்திரியின் விளைச்சல் மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.

    கடமலை மயிலை ஒன்றியத்தில் கொட்டை முந்திரி விளைச்சல் பாதிப்பு.

    கடமலை மயிலை ஒன்றியத்தில் நோய் தாக்குதலால் கொட்டை முந்திரி விளைச்சல் பாதிப்பு அடைந்துள்ளது.
    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை&மயிலை ஒன்றியத்தில் ஏராளமான கிராமங்களில் கொட்டை முந்திரி விவசாயம் நடை-பெற்று வருகிறது. தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் போதுமான அளவில் மழை இல்லாததால் கொட்டை முந்திரியின் விளைச்சல் மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது.

    மேலும் விலையும் ரூ.80 முதல் ரூ.90 வரை சந்தையில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

    உற்பத்தி மற்றும் விலை குறைந்துள்-ளதால் இந்த ஆண்டு கொட்டை முந்திரி விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கொட்டை முந்திரி  விளைச்சல் நேரத்தில் கடமலை மயிலை ஒன்றியத்தில் போதுமான அளவில் மழை இல்லை.

    மேலும் சில மரங்களில் கருகல் நோய் ஏற்பட்டதால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக விளைச்சல் அதிக அளவில் இருந்தாலும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விலை மிகவும் குறைந்து காணப்பட்டது.

    எனவே தொடர்ந்து 3 ஆண்டுகளாக நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வரும் கொட்டை முந்திரி விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
    Next Story
    ×