search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்தியமங்கலத்தில் கனமழை கொட்டியது
    X
    சத்தியமங்கலத்தில் கனமழை கொட்டியது

    சத்தியமங்கலத்தில் 2 மணி நேரம் கனமழை கொட்டியது- வெப்பம் தணிந்து குளிர்ந்தகாற்று வீசியது

    சத்தியமங்கலத்தில் இரவு லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கடந்த ஒரு வாரம் தினமும் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வந்தது.

    வெயில் தாக்கத்துடன் அனல்காற்று சேர்ந்து வீசியதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் குழந்தைகள் பெரியவர்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. காலை 7 மணிக்கு கொளுத்த தொடங்கிய வெயில் மாலை வரை நீடித்தது.

    இந்நிலையில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. ஈரோடு மாநகர பகுதியிலும் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வது போல் இருந்தது. ஆனால் மழை பெய்யாமல் ஏமாற்றி விட்டது.

    இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இரவு 9 மணிக்கு லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கனவே வெப்ப தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் பவானிசாகர், குண்டேரிப்பள்ளம், பவானி போன்ற பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. இதனால் இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

    குண்டேரிபள்ளம் - 6.4, பவானிசாகர் - 6.2, சத்தியமங்கலம் - 4, சென்னிமலை - 3. 
    Next Story
    ×