என் மலர்
உள்ளூர் செய்திகள்

சஸ்பெண்டு
பண்ருட்டி சிறையில் மோதல் எதிரொலி: ஏட்டு-வார்டன் திடீர் சஸ்பெண்டு
பண்ருட்டி சிறையில் ஒழுங்கீனமாகநடந்து கொண்ட வார்டன் மற்றும் ஏட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கும்பகோணம் சாலையில் கிளை சிறை உள்ளது. இங்கு ஏட்டாக ராஜவேல், வார்டனாக சதீஷ்குமார் பணியாற்றி வருகிறார்கள்.
சம்பவத்தன்று சதீஷ்குமார் பணியில் இருந்தபோது கிளை சிறையில் உள்ள ஒரு கைதியின் உறவினர் அங்கு வந்தார். அப்போது ஏட்டு ராஜகோபால் வார்டன் சதீஷ்குமாரிடம் வந்து இருப்பவர் எனக்கு தெரிந்தவர்தான். எனவே அவரை அனுமதிக்கும்படி கூறினார். ஆனால் அதற்கு சதீஷ்குமார் மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது மோதலாக வெடித்தது.
ஆத்திரம் அடைந்த ராஜகோபால் அங்கு கிடந்த தடியால் சதீஷ்குமாரை தாக்கினார். இதில் அவர் கீழே சுருண்டு விழுந்தார். இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. படுகாயம் அடைந்த சதீஷ்குமார் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் ஆகியோர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்.
சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் 2 பேரையும் வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பணியின்போது ஒழுங்கீனமாக 2 பேரும் நடந்து கொண்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து வார்டன் மற்றும் ஏட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கும்பகோணம் சாலையில் கிளை சிறை உள்ளது. இங்கு ஏட்டாக ராஜவேல், வார்டனாக சதீஷ்குமார் பணியாற்றி வருகிறார்கள்.
சம்பவத்தன்று சதீஷ்குமார் பணியில் இருந்தபோது கிளை சிறையில் உள்ள ஒரு கைதியின் உறவினர் அங்கு வந்தார். அப்போது ஏட்டு ராஜகோபால் வார்டன் சதீஷ்குமாரிடம் வந்து இருப்பவர் எனக்கு தெரிந்தவர்தான். எனவே அவரை அனுமதிக்கும்படி கூறினார். ஆனால் அதற்கு சதீஷ்குமார் மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அது மோதலாக வெடித்தது.
ஆத்திரம் அடைந்த ராஜகோபால் அங்கு கிடந்த தடியால் சதீஷ்குமாரை தாக்கினார். இதில் அவர் கீழே சுருண்டு விழுந்தார். இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. படுகாயம் அடைந்த சதீஷ்குமார் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் ஆகியோர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்.
சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வன் 2 பேரையும் வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பணியின்போது ஒழுங்கீனமாக 2 பேரும் நடந்து கொண்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து வார்டன் மற்றும் ஏட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
Next Story






