என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை

    பவானியில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானி:

    பவானியில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி கோட்டைநகர் செங்காடு பகுதியை சேர்ந்த மான் அருள்ராஜ் (47). மளிகை கடையில் கூலி வேலை செய்து வந்தார். 

    இவருக்கு திருமணமாகி மனைவி, 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அருள்ராஜுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. 

    கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே அருள்ராஜ் இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து பவானி போலீசார்   வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×