என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் பப்ஜி விளையாடியதை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் மாயம்
Byமாலை மலர்7 April 2022 6:06 AM GMT (Updated: 7 April 2022 6:06 AM GMT)
கோவையில் பப்ஜி விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மாயமான பிளஸ்-2 மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை:
கோவை காட்டூர் செல்லப்பன் வீதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் பஸ்வான். இவரது மகன் பல ராம்குமார் (வயது 17). இவர் ஆர்.எஸ். புரத்தில் அரசு பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.
கொரோனா பரவல் காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பாடம் படிப்பதற்காக பலராம்குமாருக்கு அவரது பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்து இருந்தனர். தற்போது பரவல் குறைவதால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பலராம்குமார் பள்ளி பாடங்களை சரியாக படிக்காமல் நண்பர்களுடன் சேர்ந்து செல்போனில் அடிக்கடி பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று பலராம்குமார் தனது நண்பர்களுடன் செல்போன் மூலமாக பப்ஜி விளையாடி கொண்டிருந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் தனது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதுகுறித்து பலராம்குமாரின் பெற்றோர் மாயமான தங்களது மகனை கண்டுபிடித்து தரும்படி காட்டூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பிளஸ் 2 மாணவரை தேடி வருகிறார்கள்.
கோவை காட்டூர் செல்லப்பன் வீதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் பஸ்வான். இவரது மகன் பல ராம்குமார் (வயது 17). இவர் ஆர்.எஸ். புரத்தில் அரசு பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.
கொரோனா பரவல் காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பாடம் படிப்பதற்காக பலராம்குமாருக்கு அவரது பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்து இருந்தனர். தற்போது பரவல் குறைவதால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பலராம்குமார் பள்ளி பாடங்களை சரியாக படிக்காமல் நண்பர்களுடன் சேர்ந்து செல்போனில் அடிக்கடி பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று பலராம்குமார் தனது நண்பர்களுடன் செல்போன் மூலமாக பப்ஜி விளையாடி கொண்டிருந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனவேதனை அடைந்த அவர் தனது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை.
இதுகுறித்து பலராம்குமாரின் பெற்றோர் மாயமான தங்களது மகனை கண்டுபிடித்து தரும்படி காட்டூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பிளஸ் 2 மாணவரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X