என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 10 ஆயிரம் வழக்குப்பதிவு

    ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த மாதம் போக்குவரத்து விதி முறைகளை மீறியதாக 10 ஆயிரம் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.3 லட்சத்து 4 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த மாதம் போக்குவரத்து விதி முறைகளை மீறியதாக 10 ஆயிரம் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.3  லட்சத்து 4 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக  போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    ஈரோடு தெற்கு, வடக்கு போக்குவரத்து போலீசார் மாநகர் பகுதி முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த மாதம் போக்குவரத்து விதி முறைகளை மீறியதாக 10,756 வழக்குகள் இந்த இரு போக்குவரத்து போலீ சாரால் பதிவு செய்யப் பட்டுள்ளது.

    இதில் தெற்கு போக்குவரத்து போலீசில்  மொபைல் போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக 201 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓடியதாக 1592 வழக்குகள்,  ஹெல்மெட் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்றதாக 1010 வழக்குகள், சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 149, டிரைவிங் லைசன்ஸ் இன்றி சென்றது 121,  3 பேர் அமர்ந்து சென்றது 140 என மொத்தம் 4,164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதேபோல் வடக்கு போக்குவரத்து போலீசில் மொபைல் போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக 94 வழக்குகள், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 2762, ஹெல்மெட் அணியா மல் பின்னால் அமர்ந்து சென்றதாக 2424, சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 234, 3 பேர் சென்றதாக 199 என மொத்தம் 6,592 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    இதன் மூலம் ரூ.3  லட்சத்து 4 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக  போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×