என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111.33-க்கு விற்பனை
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111.33 காசுக்கு விற்பனை செய்வதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111.33 காசுக்கு விற்பனை செய்வதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல்& டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
கடந்த மாதம் 21-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் விலை விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.58-க்கு விற்பனை யானது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் ரூ. 100.68-க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல், விலை உயர்ந்துள்ளது.
ஈரோட்டில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் மேலும் 75 காசுகள் அதிகரித்து ரூ.111.33 காசுக்கு விற்பனை ஆனது. இதேப்போல் ஒரு லிட்டர் டீசல் மேலும் 76 காசுகள் அதிகரித்து ரூ.101.44 காசுக்கு விற்பனை ஆனது.
அதாவது கடந்த 15 நாட்களில் 13 முறை பெட்ரோல் டீசல், விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள், சிறு வியாபாரிகள் திணறி வருகின்றனர்.
இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






