என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் ஆர்த்தி ஆய்வு
    X
    கலெக்டர் ஆர்த்தி ஆய்வு

    ஸ்ரீபெரும்புதூர் அருகே அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு

    குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்று அங்குள்ள ஊழியர்களுக்கு கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தினார்.

    காஞ்சிபுரம்:

    ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்துக் உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்தார்.

    அப்போது பால்நெல்லூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு கலெக்டர் ஆர்த்தி சென்றார். அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை ஆய்வு செய்தார். மேலும் குழந்தைகளிடம் பேசி அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

    குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்று அங்குள்ள ஊழியர்களுக்கு கலெக்டர் ஆர்த்தி அறிவுறுத்தினார்.

    இதேபோல் தத்தனூர் ஊராட்சியில் ரூ.11 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், ரூ.17 லட்சம் மதிப்பிலான மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள், முழு சுகாதார திட்டத்தில் கட்டப்பட்ட தனிநபர் கழிவறைகள், குண்டு பெரும்பேடு ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பில் தோண்டப்பட்டிருந்த திறந்தவெளி கிணறு, அரசு பள்ளி சுற்றுச்சுவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் பன்ரூட்டி ஊராட்சியில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் ஆகியவற்றை கலெக்டர் ஆர்த்தி ஆய்வு செய்து பணிகள் குறித்த விவரம் மற்றும் பணிகளின் தரம் ஆகியவற்றை உறுதி செய்து நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, ஊரக வளர்ச்சி திட்ட முதன்மை செயற்பொறியாளர் அருண் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×