என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலாப்பழம்
பண்ருட்டியில் பலாப்பழ சீசன் தொடங்கியது
ஊட்டச்சத்து மிக்கதும், மருத்துவ குணம் கொண்டதுமான பலாப்பழத்துக்கு செம்மண் கொண்ட நிலமான பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு உள்ளது.
பண்ருட்டி:
மா, பலா, வாழை ஆகிய பழங்கள் முக்கனிகளாகும். இதில் 2-வது இடத்தை பிடித்திருப்பது பலாப்பழமாகும். தித்திக்கும் தேன் சுவை இதன் தனிச்சிறப்பு ஆகும்.
பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது பலாப்பழம் தான். அது என்றும் தனி சுவை உடையது. இப்பகுதியில் உள்ள மண் வளம், தட்பவெப்ப நிலை ஆகியவை பலாப்பழம் வளமாகவும், சுவையாகவும் இருப்பதற்கு காரணம் ஆகும்.
ஊட்டச்சத்து மிக்கதும், மருத்துவ குணம் கொண்டதுமான பலாப்பழத்துக்கு செம்மண் கொண்ட நிலமான பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு உள்ளது.
ஆங்காங்கே உள்ள தோட்டங்களில் காய்த்து தொங்கும் இந்த பலாப்பழங்களை சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள் பார்த்து பரவசமடைகின்றனர். ஆண்டு தோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் பலாப்பழ சீசன். இந்த சீசன் காலத்தில் பண்ருட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் களைகட்டும். அதன்படி இந்த சீசன் காலத்தில்தான் பலாப்பழம் அதிகமாக விற்பனையாகும்.
இந்த ஆண்டுக்கான பலாப்பழ சீசன் கடந்த கார்த்திகை மார்கழி மாதங்களில் மழை காரணமாக இல்லை அது இந்த மாதம் தொடங்கி உள்ளது. ஒரு பலாப்பழம் 150 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனாவால் பலாப்பழ விற்பனை கடந்த ஆண்டு முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக பலா மண்டி அதிபர் நடுப்பிள்ளையார்குப்பம் பாலமுருகன், சுரேஷ் ஆகியோர் கூறுகையில், பண்ருட்டியில் 3 கிலோமீட்டர் வரை 100-க்கும் அதிகமான பலா மண்டி உள்ளன. இந்த ஆண்டு நல்ல விளைச்சல் உள்ளது. தினமும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் சென்னை, ஆந்திரா, கேரளா, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் பண்ருட்டியிலிருந்து பலாப்பழங்கள் அனுப்பப்படுகிறது என்றனர்.
மா, பலா, வாழை ஆகிய பழங்கள் முக்கனிகளாகும். இதில் 2-வது இடத்தை பிடித்திருப்பது பலாப்பழமாகும். தித்திக்கும் தேன் சுவை இதன் தனிச்சிறப்பு ஆகும்.
பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது பலாப்பழம் தான். அது என்றும் தனி சுவை உடையது. இப்பகுதியில் உள்ள மண் வளம், தட்பவெப்ப நிலை ஆகியவை பலாப்பழம் வளமாகவும், சுவையாகவும் இருப்பதற்கு காரணம் ஆகும்.
ஊட்டச்சத்து மிக்கதும், மருத்துவ குணம் கொண்டதுமான பலாப்பழத்துக்கு செம்மண் கொண்ட நிலமான பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு உள்ளது.
ஆங்காங்கே உள்ள தோட்டங்களில் காய்த்து தொங்கும் இந்த பலாப்பழங்களை சிறுவர்கள், சிறுமிகள், பெண்கள் பார்த்து பரவசமடைகின்றனர். ஆண்டு தோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் பலாப்பழ சீசன். இந்த சீசன் காலத்தில் பண்ருட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் களைகட்டும். அதன்படி இந்த சீசன் காலத்தில்தான் பலாப்பழம் அதிகமாக விற்பனையாகும்.
இந்த ஆண்டுக்கான பலாப்பழ சீசன் கடந்த கார்த்திகை மார்கழி மாதங்களில் மழை காரணமாக இல்லை அது இந்த மாதம் தொடங்கி உள்ளது. ஒரு பலாப்பழம் 150 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனாவால் பலாப்பழ விற்பனை கடந்த ஆண்டு முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக பலா மண்டி அதிபர் நடுப்பிள்ளையார்குப்பம் பாலமுருகன், சுரேஷ் ஆகியோர் கூறுகையில், பண்ருட்டியில் 3 கிலோமீட்டர் வரை 100-க்கும் அதிகமான பலா மண்டி உள்ளன. இந்த ஆண்டு நல்ல விளைச்சல் உள்ளது. தினமும் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் சென்னை, ஆந்திரா, கேரளா, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் பண்ருட்டியிலிருந்து பலாப்பழங்கள் அனுப்பப்படுகிறது என்றனர்.
Next Story






