search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் பறிப்பு (கோப்பு படம்)
    X
    பணம் பறிப்பு (கோப்பு படம்)

    திருப்பூர் அருகே போலீஸ் போல் நடித்து கெமிக்கல்ஸ் நிறுவன உரிமையாளரை கடத்தி ரூ.7 லட்சம் பறித்த கும்பல்

    திருப்பூர் அருகே போலீஸ் போல் நடித்து கெமிக்கல்ஸ் நிறுவன உரிமையாளரை கடத்தி ரூ.7 லட்சம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்குளிL

    திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி காங்கயம் பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் கண்ணன் (வயது 52). இவர் செங்கப்பள்ளியில் கெமிக்கல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 7-ந் தேதி வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். செங்கப்பள்ளி மேம்பாலம் அருகே சென்றபோது காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

    சிறப்பு தனிப்படை போலீசார் என்று அறிமுகப்படுத்தி கொண்ட அவர்கள்,சுரேஷ் கண்ணனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி அவரை காரில் ஏற்றினர். அவரது மோட்டார் சைக்கிளை கும்பலை சேர்ந்த ஒருவர் எடுத்து கொண்டு, காரை பின்தொடர்ந்து சென்றார்.

    இந்தநிலையில் காரில் செல்லும் போது சுரேஷ் கண்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். இதையடுத்து அந்த கும்பலில் ஒருவரை நிறுவனத்துக்கு அனுப்பி ரூ.7 லட்சத்தை பெற்றனர். மறுநாள் காலை பெருந்துறையில் சுரேஷ் கண்ணனை இறக்கி விட்டு காரில் தப்பிச்சென்றனர்.

    இது குறித்து சுரேஷ் கண்ணன் ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பல் யாரென்று விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விசாரணையில் சுரேஷ் கண்ணனை கடத்தி பணம் பறித்தது ஈரோடு மாவட்டம், பவானியை சேர்ந்த எட்வர்டு, (55), சேகர்(42) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள குரு, பிரகாஷ், பிரபு, தமிழ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    சுரேஷ் கண்ணனிடம் பணபுழக்கம் இருப்பது, எட்வர்டு, சேகர் ஆகியோருக்கு தெரிந்தது. இதையடுத்து அவரை நோட்டமிட்டு 6 பேரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×