என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழா
கல்லூரியில் தியாகிகள் தினவிழா
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தியாகிகள் தினவிழா நடந்தது.
சிவகாசி
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலின்படி சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் தியாகிகள்தினம் அனுசரிக்கப்பட்டது.
தமிழியல் துறை உதவி பேராசிரியை சங்கர், “சிவகாசி தியாகிகள் தினம்“ என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசுகையில், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய எண்ணற்ற தியாகிகளின் கருத்துக்களை மாணவர்கள் பொதுமக்களிடம் பரப்ப வேண்டும் என்றார்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜீவ்காந்தி வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தேவி நன்றி கூறினார். இதில் 139 மாணவ&மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மனோஜ்குமார் செய்திருந்தார்.
Next Story






