என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை.
லோடு வேன் கவிழ்ந்து விபத்து - 8 பெண்கள் படுகாயம்
நாகை அருகே லோடு வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 8 பெண்கள் படுகாயமடைந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தை சேர்ந்த கீச்சாங்குப்பம், நம்பியார் நகர் உள்ளிட்ட மீனவ கிராம பகுதிகளை சேர்ந்த பெண்கள் கும்பகோணத்திற்கு லோடு வாகனத்தில் சென்று வீடு வீடாக மீன்களை விற்பனை செய்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம். அதன்படி வழக்கம்போல மீன்களை விற்ற மீனவ பெண்கள் லோடு வாகனத்தில் நாகைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது நாகை மாவட்டம் ஒக்கூர் பவர் பிளாண்ட் அருகே திடீரென லோடு வாகனம் விபத்துக் குள்ளாகி கவிழ்ந்தது. லோடு வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் வாகனத்தில் பயணித்த 8 பெண்கள் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
நாகை மாவட்டத்தை சேர்ந்த கீச்சாங்குப்பம், நம்பியார் நகர் உள்ளிட்ட மீனவ கிராம பகுதிகளை சேர்ந்த பெண்கள் கும்பகோணத்திற்கு லோடு வாகனத்தில் சென்று வீடு வீடாக மீன்களை விற்பனை செய்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம். அதன்படி வழக்கம்போல மீன்களை விற்ற மீனவ பெண்கள் லோடு வாகனத்தில் நாகைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது நாகை மாவட்டம் ஒக்கூர் பவர் பிளாண்ட் அருகே திடீரென லோடு வாகனம் விபத்துக் குள்ளாகி கவிழ்ந்தது. லோடு வாகனம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் வாகனத்தில் பயணித்த 8 பெண்கள் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Next Story






