என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திட்டக்குடி அருகே விவசாயி வீட்டில் நகை- பணம் கொள்ளை
Byமாலை மலர்4 April 2022 9:55 AM GMT (Updated: 4 April 2022 9:55 AM GMT)
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே விவசாயி வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிமுத்து விவசாயி. அவரது மனைவி மீனாட்சி. இவர்கள் 2 பேரும் வீட்டின் வெளிப்புறம் தூங்கிக்கொண்டிருந்தனர். அதே வீட்டில் இன்னொரு அறையில் அவரது மகன் பெரியசாமி, மருமகள் தூங்கினர்.
நள்ளிரவில் மர்மநபர்கள் வீட்டின் பின்புறம் உள்ள இரும்பு கதவை நூதன முறையில் திறந்து உள்ளே சென்றனர். பின்னர் 2 அறைகளில் உள்ள பீரோவைத் திறந்தனர். பின்னர் அதிலிருந்த சிறிய நகை வைக்கும் பெட்டியை வீட்டுக்கு பின்னால் உள்ள கரும்பு வயலுக்கு தூக்கி சென்றனர். அதனை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகை, 53 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்து சென்றனர்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் பெரியசாமி விவசாய நிலத்திற்கு மின் மோட்டாரை இயக்க செல்லும்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள கதவுகள் திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம்-நகை கொள்ளை போனது தெரியவந்தது,
இதுகுறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசுவநாதன் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிமுத்து விவசாயி. அவரது மனைவி மீனாட்சி. இவர்கள் 2 பேரும் வீட்டின் வெளிப்புறம் தூங்கிக்கொண்டிருந்தனர். அதே வீட்டில் இன்னொரு அறையில் அவரது மகன் பெரியசாமி, மருமகள் தூங்கினர்.
நள்ளிரவில் மர்மநபர்கள் வீட்டின் பின்புறம் உள்ள இரும்பு கதவை நூதன முறையில் திறந்து உள்ளே சென்றனர். பின்னர் 2 அறைகளில் உள்ள பீரோவைத் திறந்தனர். பின்னர் அதிலிருந்த சிறிய நகை வைக்கும் பெட்டியை வீட்டுக்கு பின்னால் உள்ள கரும்பு வயலுக்கு தூக்கி சென்றனர். அதனை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகை, 53 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்து சென்றனர்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் பெரியசாமி விவசாய நிலத்திற்கு மின் மோட்டாரை இயக்க செல்லும்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள கதவுகள் திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம்-நகை கொள்ளை போனது தெரியவந்தது,
இதுகுறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசுவநாதன் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X