search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    திட்டக்குடி அருகே விவசாயி வீட்டில் நகை- பணம் கொள்ளை

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே விவசாயி வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிமுத்து விவசாயி. அவரது மனைவி மீனாட்சி. இவர்கள் 2 பேரும் வீட்டின் வெளிப்புறம் தூங்கிக்கொண்டிருந்தனர். அதே வீட்டில் இன்னொரு அறையில் அவரது மகன் பெரியசாமி, மருமகள் தூங்கினர்.

    நள்ளிரவில் மர்மநபர்கள் வீட்டின் பின்புறம் உள்ள இரும்பு கதவை நூதன முறையில் திறந்து உள்ளே சென்றனர். பின்னர் 2 அறைகளில் உள்ள பீரோவைத் திறந்தனர். பின்னர் அதிலிருந்த சிறிய நகை வைக்கும் பெட்டியை வீட்டுக்கு பின்னால் உள்ள கரும்பு வயலுக்கு தூக்கி சென்றனர். அதனை உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகை, 53 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்து சென்றனர்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் பெரியசாமி விவசாய நிலத்திற்கு மின் மோட்டாரை இயக்க செல்லும்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள கதவுகள் திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம்-நகை கொள்ளை போனது தெரியவந்தது,

    இதுகுறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசுவநாதன் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    Next Story
    ×