என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைதான கோவிந்தராஜன்.
    X
    கைதான கோவிந்தராஜன்.

    கஞ்சா, புகையிலை விற்ற 14 பேர் ஒரே நாளில் கைது

    ஈரோட்டில் அதிரடி சோதனையில் கஞ்சா, புகையிலை விற்ற 14 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோட்டில் அதிரடி சோதனையில்  கஞ்சா, புகையிலை விற்ற 
    14 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்.

    தமிழம் முழுவதும் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில் போலீசார் கடந்த சில நாட்களாக கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பவர்களை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராமல் கஞ்சா குட்கா பொருட்கள் பதுக்கி விற்பவர்களை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

     இதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    கருங்கல்பாளையம் போலீசார் காமராஜ்நகர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்களை விற்றதாக பி.பி.அக்ரஹாரம் கொங்குநகரை சேர்ந்த ஜெய்சிங் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

    இதேபோல் சுண்ணாம்பு ஓடையில் உள்ள ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (47) என்பவரை கருங்கல் பாளையம் போலீசார் கைது செய்தார் கள். அவர்களிட மிருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு டவுன் போலீசார் குப்பிபாலம் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு கஞ்சா விற்றதாக வளையக்கார வீதியை சேர்ந்த பூபதியின் மகன் கை என்கிற செந்தில்குமாரை (29) கைது செய்தனர். சூரம்பட்டி போலீசார் ரெயில்வே காலனியில் ரோந்து சென்றபோது, அங்கு கஞ்சா விற்றதாக கொல்லம் பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (27) என்பவரை கைது செய்தனர்.  இதேபோல் வீரப்பன் சத்திரம் போலீசார் மாணிக்கம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது குட்கா பான்மசாலா விற்பனைக்கு வைத்திருந்த அதேப் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரை கைது செய்தனர். கவுந்தப்பாடி பி.மேட்டுப் பாளையம், பட்டா சாமி கோவில் அருகே கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த மேகநாதன் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் பழைய பஞ்சாயத்து ஆபிஸ் அருகில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு, மசாலா பொருட்கள் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்து பங்களாப்புதூர் போலீசார்  சோதனையில் ஈடுபட்டனர்.

    கொங்கர்பாளையம் பொன்னம்பலம் வீதியை சேர்ந்த கோவிந்தராஜன் (48) என்பவரது இந்த மளிகை கடையில் போலீசார் சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட 5,500 ரூபாய் மதிப்புள்ள போதை பாக்கு மற்றும் போதை பான் மசாலா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
    உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதை பாக்கு மற்றும் போதை பான் மசாலா பொருட்களை மளிகை கடையில் விற்பனை செய்ததால் மளிகை கடை உரிமையாளர் கோவிந் தராஜன் மீது வழக்கு பதிவு செய்த பங்களாப்புதூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
    மேலும் போலீசார் விசாரணையில், கோவிந் தராஜன் மளிகை கடைக்கு போதை பொருட்களை மொத்த விற்பனைக்கு கொடுத்து வந்த குணசேகரன் என்ற நபர் தலைமறை வானதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
    சென்னிமலை போலீசார் மணி மலைக்கரு பஸ் நிறுத்தம் அருகே குட்கா வைத்திருந்த ரவி என்பவரை கைது செய்தனர். தாளவாடி போலீசார் பணகள்ளி என்ற பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நாகராஜன் என்பவரை கைது செய்தனர். 
    இதேபோல் தாளவாடி போலீசார் ஓசூர் ரோடு அருகே  குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த அப்துல் ஆதிக் என்பவரையும் கைது செய்தனர். மொடக்குறிச்சி போலீசார் லக்காபுரம் அருகே போதைப் பொருள்கள், வைத்திருந்த சண்முக பிரகாஷ், வனராஜா என்பவரை கைது செய்தனர்.பவானி போலீசார் பவானி மயிலம்பாடி ரோடு பகுதியில் குட்கா, பான் மசாலா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முத்து கண்ணன் என்பவரை கைது செய்தனர். இவ்வாறாக மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 14 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
    Next Story
    ×