என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    தாம்பரத்தில் தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு- 2 பேர் கைது

    தாம்பரத்தில் தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். கொத்தனார்.

    இவர் நேற்று மாலை தாம்பரம் பகுதிக்கு வந்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக கிஷ்கிந்தா சாலையில் வந்தார். பின்னர் அங்குள்ள மதுபான கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கும்பல் அவரை வழிமறித்து கத்திமுனையில் செல்போன், பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து வெங்கடேசன் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக தாம்பரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த வருண் குமார், ஜான் மேத்தியூஸ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக 2 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×