என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
கோபி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
கோபி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி லதா (28). இவர் களுக்கு ஒரு மகன். ஒரு மகள் உள்ளனர்.
செல்வத்துக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது மனைவி கண் டித்தார். ஆனால் அவர் குடி பழக்கத்தை விடவில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் லதா மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது லதா வீட்டில் பேனில் சேலையால் தூக்கு போட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே லதா இறந்தார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






