என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரிய மார்க்கெட்டில் காய்கறி விற்பனை நடந்த காட்சி.
    X
    பெரிய மார்க்கெட்டில் காய்கறி விற்பனை நடந்த காட்சி.

    வ.உ.சி.பெரிய மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்ந்தது

    வரத்து குறைவு எதிரொலியாக ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.
    ஈரோடு:

    வரத்து குறைவு எதிரொலியாக ஈரோடு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.

    ஈரோடு பெரிய காய்கறி மார்க்கெட் வ.உ.சி.பூங்கா பகுதியில் இயங்கி வருகிறது. தாளவாடி, அந்தியூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் போன்ற பகுதியில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் வரத்தாகி வருகின்றன.

    இதேபோல் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்தும் காய்கறிகள் அதிக அளவில் வரும். ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெட்டிகளில் தக்காளிகள் வரத்தாகி வருகிறது.

    கடந்த சில வாரங்களாக காய்கறிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்து இருந்தது. இந்நிலையில் தற்போது காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் வ.உ.சி மார்க்கெட்டில் காய்கறிகள் ரூ.10 முதல் ரூ. 15 வரை விலை உயர்ந்துள்ளது.

    குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரு கிலோ தக்காளி ரூ.5 முதல் 7 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தினமும் வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு ஆயிரம் பெட்டிகள் தக்காளி வரத்தானது. தற்போது வெறும் 350 பெட்டிகள் மட்டுமே வருகிறது. இதன் எதிரொலியாக இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.16 முதல் ரூ.20 வரை விற்பனையானது.

    இதேபோல் மற்ற காய்கறிகளின் விலை கிலோவிற்கு வருமாறு:
    பீன்ஸ்-60  முதல் 70, பீட்ரூட்-40 முதல் 50, கேரட்-60 முதல் 80, கத்திரிக்கா-20, வெண்டைக்காய்-40, பீர்க் கங்காய்-35, பாவைக்காய்-25, முள்ளங்கி-25, முருங்கைக்காய்-40 முதல் 50, அவரைக்காய் - 60, மிளகாய், இஞ்சி-50, முட்டைக் கோஸ்-20, காலிங்ப்ளவர்-10, சின்ன வெங்காயம்-25, பெரிய வெங்காயம்-20.
    Next Story
    ×