search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரி
    X
    வரி

    கருங்குழி பேரூராட்சியில் 4-வது ஆண்டாக 100 சதவீதம் வரி வசூல்

    செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சி 4வது ஆண்டாக வரி வசூலில் 100 சதவீதத்தை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சியில் கடந்த 2021-22-ம் நிதி ஆண்டில் பேரூராட்சியில் வசிக்கின்ற பொதுமக்கள் செலுத்தவேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், வரியில்லா இனம் ஆகியவற்றை 100 சதவீதம் வரி வசூல் செய்துள்ளனர். தொடர்ந்து இந்த பேரூராட்சி 4வது ஆண்டாக 100 சதவீதம் வரி வசூல் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் கூறுகையில், ‘வரி வசூலில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், வரி வசூல் செய்வதில் ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்’.

    Next Story
    ×