என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    மசாஜ் சென்டர் மேலாளர் கைது

    பெருந்துறை மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடத்திய மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை கோவை மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் லாட்ஜ் மற்றும் ரிசார்ட்ஸ் சென்டர்,  மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து காஞ்சி கோவில் போலீஸ் நிலை யத்தில் பணியாற்றும் ராஜா என்ற போலீஸ்காரர் சாதாரண உடையில் பெருந்துறை யில் உள்ள மசாஜ் சென்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

    அங்கு மசாஜ் சென்டர் மேலாளர் தினேஷ் குமார் என்பவரிடம் மசாஜ் செய்து கொள்ள வேண்டும் என்று ராஜா கூறினார்.

    இதற்கு மேலாளர் மசாஜ் செய்ய ரூ.2 ஆயிரம் என்றும்,  மேலும் ரூ.2 ஆயிரம் கொடுத்தால் பெண்களுடன் உல்லா சமாக இருக்கலாம் என்று கூறினார். 

    இதையடுத்து ராஜா இதற்கு சம்மதம் என கூறி பணத்தை கொடுத்தார்.இதை தொடர்ந்து அவர் அங்கு இருந்த 3 பெண்களில் ஒரு பெண்ணை அழைத்து கொண்டு சென்றார். 

    பின்னர் அவர் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வரு வதாக கூறி விட்டு தனியாக வந்து இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து உடனடியாக தயார் நிலையில் இருந்த தனிப்படை போலீ சார் மசாஜ் சென்டருக்குள் புகுந்தனர். 

    அவர்கள் மேலாளர் தினேஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து அந்த மசாஜ் சென்டரில்  இருந்த 3 பெண்களையும் மீட்டு மகளிர் காப்பகத்துகு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட தினேஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டார். 
    Next Story
    ×