search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் பறிப்பு (கோப்பு படம்)
    X
    செல்போன் பறிப்பு (கோப்பு படம்)

    வானகரத்தில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறிப்பு

    வானகரத்தில் கல்லூரி மாணவரிடம் செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ஹரிகிருஷ்ணாசுஜித். கல்லூரி மாணவரான இவர் பகுதி நேரமாக இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று இரவு 11மணி அளவில் ஹரிகிருஷ்ணா ஆட்டோவில் வானகரம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 வாலிபர்கள் சவாரிக்கு அழைப்பது போல நடித்து திடீரென ஹரிகிருஷ்ணாவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×