என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போலி பத்திரம் மூலம் கடன்பெற்று மோசடி: முன்னாள் வங்கி மேலாளர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை
Byமாலை மலர்1 April 2022 2:38 AM GMT (Updated: 1 April 2022 2:38 AM GMT)
போலி பத்திரம் மூலம் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வங்கியின் முன்னாள் மேலாளர் உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டில் யூகோ வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 2016-ம் ஆண்டு போலி பத்திரம் மூலம் முதலியார்பேட்டையை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான கணேசன் என்பவருக்கு ரூ.6 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
இதற்கு முன்னாள் வங்கி மேலாளர் தென்னரசு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்தநிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட கணேசன், தென்னரசு ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன் தீர்ப்பு அளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் பிரவீன்குமார் ஆஜரானார்.
புதுச்சேரி காலாப்பட்டில் யூகோ வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 2016-ம் ஆண்டு போலி பத்திரம் மூலம் முதலியார்பேட்டையை சேர்ந்த ஓட்டல் உரிமையாளரான கணேசன் என்பவருக்கு ரூ.6 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
இதற்கு முன்னாள் வங்கி மேலாளர் தென்னரசு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்தநிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட கணேசன், தென்னரசு ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன் தீர்ப்பு அளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் பிரவீன்குமார் ஆஜரானார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X