என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
சனிக்கிழமை தோறும் பள்ளிகளுக்கு விடுமுறை
கடும் வெயில் தாக்கத்தினால் சனிக்கிழமை தோறும் பள்ளிகளுக்கு விடுமுறை ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்.
சீர்காழி:
சீர்காழியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மயிலாடுதுறை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கி.செல்வராசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கு.விஜயகுமார், மாவட்ட பொருளாளர் வீ.ராஜம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருப்பதால் மாணவர்களின் நலன்கருதி பிரதி சனிக்கிழமை தோறும் பள்ளிகளுக்கு 1&ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க வேண்டும். ஓராசிரியர் பள்ளிகளாக இயங்கிவரும் உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் மாற்றுப்பணியில் தேவைக்கு அதிகமாக உள்ள உபரி ஆசிரியர்களை உதவிப்பெறும் பணி புரிய ஆணை வழங்கவேண்டும்.
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக மாற்றுபணிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு பதிலாக அவ்விடத்தில் உபரி ஆசிரியர்களை கொண்டு நிரப்பவேண்டும். பணிவரன்முறை, தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வேண்டி விண்ணப் பிக்கும் ஆசிரியர்களுக்கு அந்தந்த வட்டாரத்தில் முகாம் நடத்தி உடனுக்குடன் ஆணை வழங்க மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் நல்லமணி, சூரியமூர்த்தி, ராஜேஷ், ஜெயபாரதி, தேன்மொழி, ரவிச்சந்திரன், வேல்முருகன், சங்கர், நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
சீர்காழியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மயிலாடுதுறை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கி.செல்வராசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கு.விஜயகுமார், மாவட்ட பொருளாளர் வீ.ராஜம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருப்பதால் மாணவர்களின் நலன்கருதி பிரதி சனிக்கிழமை தோறும் பள்ளிகளுக்கு 1&ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க வேண்டும். ஓராசிரியர் பள்ளிகளாக இயங்கிவரும் உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் மாற்றுப்பணியில் தேவைக்கு அதிகமாக உள்ள உபரி ஆசிரியர்களை உதவிப்பெறும் பணி புரிய ஆணை வழங்கவேண்டும்.
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக மாற்றுபணிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு பதிலாக அவ்விடத்தில் உபரி ஆசிரியர்களை கொண்டு நிரப்பவேண்டும். பணிவரன்முறை, தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வேண்டி விண்ணப் பிக்கும் ஆசிரியர்களுக்கு அந்தந்த வட்டாரத்தில் முகாம் நடத்தி உடனுக்குடன் ஆணை வழங்க மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் நல்லமணி, சூரியமூர்த்தி, ராஜேஷ், ஜெயபாரதி, தேன்மொழி, ரவிச்சந்திரன், வேல்முருகன், சங்கர், நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
Next Story






