என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திராவிடமணி
    X
    திராவிடமணி

    புகையிலை பொருள் விற்ற பெட்டிக் கடைக்காரர் கைது

    கொள்ளிடத்தில் புகையிலை பொருள் விற்ற பெட்டிக் கடைக்காரை போலீசார் கைது செய்தனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் திராவிடமணி (61) இவர் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூர் கடைவீதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் மாவட்ட எஸ்.பி தனி படைப் பிரிவைச் சேர்ந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் திடீரென சோதனையிட்டபோது தடை செய்யப்பட்ட 86 புகையிலை பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்து பெட்டிக்கடைக்காரர் திராவிடமணியை கைது செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ 2000 இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×